Posts

Showing posts from October, 2016

மெளனம்!!

மெளனம்!! மெளனத்தால் கொல்லும் வித்தை எங்கு பயின்றாய்?! - அ.ச.கி.

காதலி இல்லா இடம்!!

காதலி இல்லா இடம்!!   தன் காதலி இல்லா இடம் தேவையில்லை என்று எண்ணியாதால் தானோ இயேசுவும் தன் கல்லறையில் இருந்து எழுந்துவிட்டார்!!      - அ.ச.கி.

கைக்குட்டை!

கைக்குட்டை!   நான் கைக்குட்டையாக பிறந்திருக்கலாம்! நண்பனாக உன் கண்ணீர் துடைப்பதற்கும்! காதலனாக உன் உதட்டை வருடுவதற்கும்!!      - அ.ச.கி.

கைக்குழந்தை!

கைக்குழந்தை! நான் கைக்குழந்தையாக மாறவும் தயங்கமாட்டேன்! அப்பொழுதாவது நீ எனக்கு முத்தம் தருவாய் என்றால்!!      - அ.ச.கி.

மலர்தான் நான்!

மலர்தான் நான்! இன்னும் எத்தனை நேரம்?! இப்படியே அசைவற்று இருப்பது! இன்னும் எத்தனை நேரம்?! இமைநிறைய வேடிக்கை மட்டுமே காண்பது! இன்னும் எத்தனை நேரம்?! கரையின்மேல் அமர்ந்து கொண்டே கடலோடு உரையாடுவது!! நான் அசையாமல் இருக்க இருகைகள் அழுத்திப் பிடிக்கின்றன! காற்றோடு பறக்கலாம் என்றால் கயிறு கொண்டு கட்டிவிட்டார்கள்! ஏன்?! என்னை மட்டும் ஏன்! இத்தனை பேர் சுற்றியிருக்க என்மேல் மட்டும் ஏன் இத்தனை கரிசனம்?! விளையாடுவதில் கிடைக்கும் விடலைகளின் இன்பம் யார் அறிவார்?! சரி! எனக்காய் இத்தனை பிரயத்தனப்படும் இவர்களுக்கென, இரண்டு நிமிடம் துறவியாகிறேன்! ஆசைகளை துறக்கிறேன்!! அட! நான் மனதில் நினைத்ததை இவர்கள் செவிக்கு தூது சொன்னவன் யார்?!! துறவி என்றவுடன் தூக்கி பூஜையில் அமர்த்துகிறார்கள்!! "கவனிப்புகள்" கூடுகின்றன! ஊதுவர்த்தி தொடங்கி ஆர்த்திவரை அத்தனையும் செய்தாகிவிட்டது!! சாதமும் பரிமாறுகிறார்கள்?! பூஜைக்கு பின் பிரசாதமோ! ஆஹா! ஆவலாய்! ஆர்வமாய்!! ஆசையாய்!!! நான் எதிர்பார்த்த நொடி வந்தேவிட்டது!! கடலுடன் என்