பெண் சிசுவுக்கு! ஓ! பெண்ணே! மறுசனனம் ஒன்றெடுத்து - ஆண் மகவு உருவெடுத்து - இம் மண்ணில் பாதம் பதி! அன்று உனக்கு இவ்வுலகில் இடம் இருக்கும்! இல்லையேல்- உன் அன்னையின் மார்பு காம்பை நீ கவ்வும்முன் இம்மண் உன்னைக் கவ்வும்! பால்மனம்- உன் நாசியை நிறைக்கும்முன் பாழும் உலகம் உன் கழுத்தை நெரிக்கும்!! - அ.ச.கி.