கனவு தூரிகை!
கனவு தூரிகை! ஏ! பெண்ணே!! கண்டநொடி முதல் கண்ணாலே பேசி கிறங்கடிக்கிறாய்! காணாத நாட்களில் என் தூக்கத்தைத் துரத்துகிறாய்!! என் கனவு தூரிகையில் சிக்கிய ஓவியமாய் சிந்தையில் நிற்கிறாய்! விழி வழி நுழைந்து - என்னை வீழ்த்தியது போதும்! செவி வழி பிளந்து இதயம் சென்றடைய உன்னை பேசச் சொல்லி கேட்கிறேன்!! அதற்கு நீ தீர்க்கமாய் உதிர்த்த அந்த ஒற்றை சிரிப்பில் சிதைந்து போன கோபுரச் சீமான்கள் எத்தனையோ!! - அ.ச.கி.