Posts

Showing posts from 2017

வேடிக்கை பார்த்தவை!

இதுவரை என் வாழ்நாளில் நான் எழுதிய மிக நீண்ட கவிதை இது தான். 2017 - ஒரு பார்வை! வேடிக்கை பார்த்தவை! அம்மாவுடன் முடிந்து அழுக்குடனும் அதிரடியாகவும் ஆயிரம் அரசியலை சுமந்தவாறு விடிந்தது 2017! மாதம் ஒன்று: தமிழுக்கும் தமிழருக்குமாய் ஒரு போராட்டம்! இனி வருடந்தோறும் - எம் தெருக்களில் ஏரோட்டம்! இளைஞர் பெருங்கூட்டத்தால் மனத்தினில் களியாட்டம்! இளைஞர் மூட்டிய தீயணைக்க தீவிரவாதம் என்றோர் தீவைத்து தீர்த்தனர் மாபெரும் யுத்தத்தை ஆர்த்தனர் தீவிரவாத ரத்தத்தை! மாதம் இரண்டு: நாட்டின் உச்ச அரசியலும் எச்ச அரசியலும் - அதன் நர்த்தனம் துவங்கிய மாதம்! சின்னம்மா எழுச்சியும் அய்யாவின் தியானமும் சிறையிலே சென்று களித்ததும் பன்னீரும் ஸ்டாலினும் பார்த்து பேசி சிரித்ததும் இம்மாதமே! காவி வண்ணம் மெல்லமாய் காலை ஊன்றி நின்றதும் கால் இல்லாதவரெல்லாம் நாற்காலியை வென்றதும் இம்மாதமே! மாதம் மூன்று: சோறிட்ட எங்கப்பனும் மாரிலிட்டு பாலுட்டிய எங்கம்மையும் தெருவிலிட்டு அநாதையாய் அம்மணமாய் எலி கடித்து உருண்டிருந்தபோது, ஏசியிட்ட அறையில் கைகுலுக்கி புகைபடத்துக்கு முகம்காட்டி பல்லிளித்து பரிசளித்து முதல் பக்கவிளம்பரம் கொடுத்து மகிழ்ந

ஊனம்!

ஊனம்! முழுதும் செயலற்று போவதல்ல ஊனம்! முடியாது என்று நினைப்பதே ஊனம்!! -அ.ச.கி.

அவள் பெயர் கௌசல்யா!

அவள் பெயர் கௌசல்யா! நீதி மீண்டு(ம்) ஒருமுறை நிலைகுத்தி கம்பீரமாய் நிற்கிறது! நீதியின் காலடியில் காதல்ரத்தம் ஈரமாய் நிற்கிறது! காதலின் ரத்தம் எடுத்து சாதியின் வேர்களுக்கா விட்டுவைத்தீர்? உன் ஒருத்தனுக்கு ஒளிகிடைக்க ஊரையா பற்ற வைப்பீர்? உணர்வில்லா வெறும் உடல் கொண்ட உனக்கு உயிர் எதற்கு?! உடை எதற்கு?! அதர்மத்தின் அடியொற்றி வாழும் அடியோன் உனக்கு அடுத்தவன் அம்மணம்தானே மூலதனம்! உன் முகத்தில் உமிழ்வதைக்கூட என் மனம் விரும்பவில்லை! மலம் விற்று பிழைக்கும் உனக்கு எச்சில் எல்லாம் எம்மாத்திரம்? என்னதான் சொன்னாலும் ஒப்பாறி வைத்தாலும் தூக்குக் கயிறாலும் கூட துக்கத்தின் தழும்பை சீர் செய்யமுடியுமா? தீ சுட்ட காயத்தினை நேர் செய்யமுடியுமா? -அ.ச.கி.

வள்ளுவன்!

வள்ளுவன்! ஒற்றை நூல் தந்தவன்! இரண்டடியில் உலகளந்தவன்! முப்பாலில் வாழ்வை பிரித்தவன்! நால்திசை எங்கும் தமிழ்சுவை நவின்றவன்! ஐந்திணை நிலத்துக்கும் இலக்கணம் வகுத்தவன்! ஆறு போல் நல்கருத்ததை அளித்தவன்! ஏழ்கடலை புகட்டி சிறு குறள் தறித்தவன்! எட்டும் இடமெல்லாம் சிறப்புற வாழ்பவன்! உலகோர் யாவருக்கும் உய்யும் வழி மொழிந்தவன்! மதம் இனம் மொழி வேற்றுமை களைந்தவன்! எவரும் ஏற்கும் பொதுமறை தந்தவன்! நம் முப்பாட்டன் வள்ளுவன்.....!! -அ.ச.கி.

இதையும் உள்ளடக்கியது தான் மஹாபாரதம்!

இதையும் உள்ளடக்கியது தான் மஹாபாரதம்! பாரதம் தெய்வ வரலாறாக சொல்லப்படுகிறது! அதில் எனக்கு தோன்றிய சில முரண் இடங்கள். பாரதத்தில் மிசச் சிறந்த வில்லாளன் யார் தெரியுமா? கர்ணன்? அர்ச்சுனன்? துரோணர்? பீஷ்மர்? நிச்சயம் இவர் எவரும் இல்லை. ஏகலைவன் தான் மிகச் சிறந்த வில்லாளனாக கருதப்பட வேண்டியவன். அவ்வகையில் உருவாக்கப் பட்டிருக்க வேண்டியவன். ஆனால் என்ன நிகழ்ந்தது அவனுக்கு? வேடுவன் என்ற ஒற்றை காரணத்தால் கட்டை விரலை தட்சணையாக பெற்று அவன் கலைக்கும் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் துரோணர். இவர் தான் சிறந்த குரு என்று பாரதத்தில் கொண்டாடப்படுகின்றார். நீதி தவறிய இவர் எப்படி நல்ல குருவாக சீடர்களுக்கு நன்னெறி புகட்ட முடியும்?   பாண்டவர்கள் தம் தாயுடன் ஓய்வெடுப்பதற்காக அரக்கு மாளிகைக்கு செல்கின்றனர். அரக்கு மாளிகைக்கு தீ வைத்து பாண்டவர்களை குடும்பத்தோடு எரிக்க திட்டமிடுகிறார்கள் சகுனியும், துரியோதனனும். ஆனால் அங்கிருக்கும் சூழ்ச்சி குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றது. பாண்டவர்களும் தப்பித்துவிடுகின்றனர். ஆனால் அங்கு தான் கேள்வி. பாண்டவர்கள் வெறுமனே தப்பித்து போகமாட்டார்கள். அங்கு

இராமன்!

இராமன்! சீதையின் நன்னிலை உரசிடும் பொருட்டு சிதையில் இட்டது அறச்செயலோ? தொட்டால் தலை சிதறும் என்பது இராமன் அறியா திருந்தவனோ? எவரும் அறியா சாபம் என்பின் - அதை எழுத்தர் அறிந்தது எங்ஙனமோ? இராமன் அறிகிலன் என்றே கொண்டால் அவன் தெய்வம் ஆகுதல் எங்ஙனமோ? -அ.ச.கி.

இலட்சுமிகள்!

இலட்சுமிகள்!   இலட்சுமணக் கோடுகள் கிழித்திடும் இலட்சணம் எந்தஆணுக்கும் இன்றில்லை! இலட்சுமிகள் கோட்டை தாண்டினால்மட்டும் இலகுவாய் இகழ்வது ஏனோ?! கோடுகள் இடாத இலட்சுமணனும் - இடாத கோட்டை தாண்டாத இலட்சுமிகளும் கேடுகள் இலாத அசோகவனமும் - கொண்ட நாடுகள் மலருக மலருகவே!! -அ.ச.கி.

கண்டநாள் முதலாய்!

கண்டநாள் முதலாய்! உனக்கே தெரியாமல் உன்னை தொடரும்போது எனக்கே தெரியாமல் - என் உயிர் இறங்கி உன்னுடன் நடக்கும்! எதேச்சையாய் செய்வதுபோல் என்னை எதிர்பார்த்து திரும்புவாயே! அந்த நொடி பரவசத்துக்கே அரை ஆயுள் தொலைப்பேனடி! நிலவு தொட்டு மல்லி வரை உவமை தேடி தொடுத்தாலும் உன் அழகுக்கென்றும் பொருந்தியதே இல்லை! மருதாணி விரலெல்லாம் சிவப்பு என்ன சிவப்பு? வயதுவந்த முதல்நாள் என்னைக் கண்டு சிவந்தாயே! அதைவிடவா சிவப்பு? வார்த்தை கொண்டா பேசிச் சென்றாய்?! பார்வையில் அன்றோ வருடிச் சென்றாய்! அன்பின் தோள் ஏறி அழகே உனை அடைந்தேன்! ஆசை தமிழ் கொண்டு அணங்கே உனை வரைந்தேன்! உருகிடும் உன் அன்பை பனி போர்த்தி காத்திடவா? மருகிடும் உனை நானும் எனை போர்த்தி காத்திடவா?! இதயக் குழாயிக் கிடையே இணைப் பொன்று மாறியதோ! என் இதயக்கை பற்றி - உன் நினைவு என்மேல் ஏறியதோ?! இனி என்றும் உயிருள் கிறங்கி கிடப்பாயே! உணர்வுள் இறங்கி நடப்பாயே! -அ.ச.கி.

ஆரியம் திராவிடம்!

1971 முதல் சிந்து சமவெளிக் கலாச்சாரத்தை மொழி கோணத்தில் ஆராய்ந்து வருபவர் மொழியியலாளர் அஸ்கோ பர்ப்பொலா (Asko Parpola) . அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் கீழ் காண்க. (ஆரியம் திராவிடம் குறித்ததொரு பதில்) கேள்வி : ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்றும் சிந்துசமவெளி நாகரிகம் வேதகாலத்தையும் வேதங்களையும் சார்ந்ததென்றும் சில இந்திய ஆய்வாளர்கள் கூறிவருகின்றார்களே.. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன? பதில் : நகர்ப்புறக் கூறுகள்கொண்ட சிந்துசமவெளி நாகரிகம், வேதங்களில் காணப்படும் குடிபெயர் கலாச்சாரத்திலிருந்து வெகுவாக வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, வேதங்களில் விவரிக்கப்படும் சடங்குகளில் குதிரைக்கு ஒரு முக்கியப்பங்கு உண்டு. சிந்து சமவெளியில் குதிரை இருந்திருக்கவில்லை. எழுத்து முத்திரைகளில் விலங்குகளின் உருவம் வரிக்கோட்டு உருவம் காணப்பட்டாலும், குதிரை அவைகளில் பிரதிநிதித்துவப் படுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் கி.மு.2000த்திற்கு முற்பட்ட குதிரை எலும்பு தொல்லெச்சம் எதுவும் தென்னாசியாவில் கண்டறியப்படவில்லை. குதிரை தென்னாசியாவை சேர்ந்த விலங்கல்ல. சிந்த்ய்

அண்ணல் காந்தி!

அண்ணல் காந்தி! அரைநூற்றாண்டாய் அரைக்கு நூற்று ஆண்டாய்! பொய்யாமொழி நோற்று ஆண்டாய்! உலகு உய்யும்வழி ஏற்று ஆண்டாய்! உண்ணாதிருந்து வென்றாய்! உன் நா திருத்தி வென்றாய்! எண்ணாதிருந்து வென்றாய்! - வேறு எண்ணாதிருந்து வென்றாய்! பொய்யாதிருந்து வென்றாய்! - சில செய்யாதிருந்து வென்றாய்! அண்ணலே அய்யனே அகிம்சை ஆசானே! தடியனே தகப்பனே தன்னுயிர் தந்தோனே! பித்தனே பிதாவே பிறஉயிர் காவலனே! மன்னனே மதியோனே மண்ணை மதிப்போனே! விடுதலை தந்தாய் என்றே விடலையில் பயின்றோம் உன்னை! விமர்சனம் கடந்திருந்தால் விமர்சையாய் கொண்டாடியிருப்போம் நின்னை! காதலே கொண்டேன் உன்மேல் காவியமாய் ஆவாய் என்றே! கவலைகள் உன்மேல் எனக்கு காவியாய் நின்றாய் என்றே! ஒட்டிய தூசி தட்டியிருந்தால் கொட்டியிருப்பேன் என் நேசத்தை! எட்டிய இடமெல்லாம் உன்புகழை கொட்டடித்திருப்பேன் என் பாசத்தை! -அ.ச.கி.

கடவுள்!

கோயிலுக்கே பூட்டுக்கள் தொங்கிடும்போது எந்தக் கடவுள் வந்திங்கே உமைக்காக்கும்?!​ ​ -அ.ச.கி.

பிரிவு!

பிரிவு! கண்ணை விட்டு நீரைப் போல் சதையை விட்டு ரத்தம் போல் உடலை விட்டு உயிரினைப் போல் இன்று பிரியப் போகும் என் கல்லூரி இளைய நண்பர்களே! வலிகளோடு வளர்வதுதான் வாழ்க்கை! பிரிவுகளால் எழுதப்படுவதுதான் வருங்காலம்! நட்போ, நண்பர்களோ பிரிவதில்லை. கோர்த்திருந்த கைகள் பிரிகின்றன. சேர்ந்தே ஓடிய கால்கள் தூரம் நகர்கின்றன. அருகே கேட்ட சிரிப்புச் சத்தம், சற்று விலகிப்போகிறது. எதுவும் மாறாது, மாளாது! கல்லூரிகள் வெறும் திசைகாட்டிகளே! எந்தத் திசை எங்குகொண்டு சேர்க்கும் என்பதை மட்டுமே அது சொல்லும். அதில் எந்தத் திசையில் பயணிப்பது என்பது உங்கள் தேர்வு! சரியானதை தேர்ந்தெடுத்து அடுத்த பயணம் துவங்குங்கள். பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள். கடந்தகாலத்தோடு கைகுலுக்கி பிரியுங்கள்! வருங்காலம் நிச்சயம் வாரி அணைக்கும்! -அ.ச.கி.

சொர்க்க சொப்பனம்!

சொர்க்க சொப்பனம்! உன் விழிகொண்டு என் உலகம் காண ஆசை கொண்டேன்! உன் இதயம் துடிக்க என் உயிர் வாழும் என்று எண்ணியிருந்தேன்! உன் மனம் சிந்தும் வண்ணங்களில் என் வாழ்க்கை வரையப்படும் என்று ஏக்கம் கொண்டேன்! என் உதிரம் உன் வயிற்றில் உயிராய் முளைக்கும் என்று கனவு கொண்டேன்! உன் வாழ்வின் கேள்விகளுக்கெல்லாம் நானே விடையாய் மாறிட மனம் கொண்டேன்! உன் அன்பு கடலில் நான் மட்டும் நீந்திட ஆசை கொண்டேன்! உன் மடியே என் இறுதி படுக்கை என்று இறுமாப்பு கொண்டேன்! உன்னை நான் பிரிந்தால், உலகத்தை பிரிந்த சூரியன் உதித்து என்ன பயன் என்றேன்! சொன்ன ஆசை எல்லாம் சொர்கத்திலேனும் நடக்குமென்ற சொப்பனத்தில் இன்னும் நான்! -அ.ச.கி.

கண்ணாடி வழி சிரிக்கும் கண்ணிரண்டு!

கண்ணாடி வழி சிரிக்கும் கண்ணிரண்டு! பொன்னே பொன்னை போல் பொண்ணு மூணு பெற்றமகராசி! கண்ணே கண்ணு போல காத்து வளர்த்த மகராசி!! உன் நடை தளர்நடை தான்! உன் நெஞ்சு உளர்கடை தான்! ஒடுங்கி கன்னம் சிறுத்தாலும் உடையா உளம் உனது! நடுங்கி குரல் குழைந்தாலும் கிடையாது ஓய்வென்பது! உறவுகூடும் நாளெல்லாம் உற்சவ பெருவிழாதான்! அந்நாளில் ஆளைஉருக்கும் ஆஸ்மாவும் அடியிரண்டு தள்ளிநிற்கும்! பொத்தி பொத்தி பார்த்திருந்த உன்னை புதைத்துவிட்டோம் என்கிறார்கள்! பொக்கை வாய்ச் சிரிப்பை இனி காணுவதெங்கே?! வெற்றிலை கொட்டுரலில் புறப்படும் ஸ்வரங்கள் இனி கேட்பதெங்கே?! குடும்பம் குழுமியிருக்க உணர்வுகள் பரிமாறி உருண்டை சோறு உண்பதெங்கே?! அர்ச்சுனக் கதைகள் சொல்வதற்கு இனி யாரிங்கே?! அரிச்சுவடிகள் இணையாகுமா அனுபவச் சுவடுகளுக்கு?! நினைவுகள் கோடி கொட்டி வளர்த்த நிமிடங்கள் எல்லாம் கொதிமணலில் புதைகிறது! புதைந்த அந்நொடிக்குள் புகும் வழி கிடைத்தால் உன் இறுதி நொடி திரட்டி ஒளித்து வைப்பேன்! என்ன சொல்லி என்ன செய்ய! கண்ணாடி வழி சிரிக்கும் கண்ணிரண்டை கடைசியாய் ஒரு முறை கண்டிருக்கலாம்! -அ.ச.கி.

தலித்தியம்!

தலித்தியம்! சமீபத்தில் அனிதா சம்பவத்தின்போது 'தலித்' என்ற சொல்லாடலை பயன்படுத்திய போது பெரும்பாலானோர் அதை எதிர்ப்பதை பார்த்தேன்! எதிர்த்த அனைவரும் நல்நோக்கோடு தான் அதை செய்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அப்படி சொல்லவதால் நன்மை தான் விளையும் என்பது என் தாழ்மையான கருத்து. அதற்கான காரணங்கள்: -முதலில் தலித் என்பது ஒரு சாதி பெயர் அல்ல. ஒரு இயக்கம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கென குரல் கொடுக்க துவங்கிய இயக்கம். -தலித் என்பதால் ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதில்லை. ஒருவன் ஒடுக்கப்பட்டதால் அவன் தலித் என்ற ஒற்றை குடையினுள் நின்று தன் எதிர்ப்புக் குரலை பதிவிடுகிறான். -இப்படி எண்ணிப்பாருங்கள்:-      =>ஒரு மாணவி 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் எடுத்தாள்.      =>ஒரு தலித் மாணவி 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் எடுத்தாள். மேற்சொன்ன இரண்டுமே ஒரே செய்திதான். ஆனால் இரண்டாம் வரியை படிக்கும்போது நம் உணர்வு சற்று மேலோங்கும். ஏனெனில் 'தலித்' எனும்போது அவளின் தினசரி வாழ்க்கை, அதன் கஷ்டங்கள் அனைத்தும் உடன் சேரும். அதை தாண்டி அவள் சாதித்திருக்கிறாள் என்பதுதான் நம்முள் அவ்வுணர்ச்சி

நீட்! (NEET)

⁠⁠⁠ நீட்! (NEET) பல்வேறு கருத்தாடல்கள். மிகக்குழப்பமான சூழல். அரசாங்கம் நம் நல்லதுக்குதான் செய்கிறது என்கிறார்கள். தரம்வாய்ந்த தகுதிவாய்ந்த மாணாக்கர் மட்டுமே மருத்துவர் ஆவர் என்கிறார்கள். எல்லாத்தையும் விட்டு விடுவோம் எனக்கு ஒரே ஒரு கேள்விதான். இந்த அரசாங்கம் நம் நல்லதுக்குதான் செய்கிறது என்று கொள்வோம். எனில் நீவிர் சொல்லும் நல்லதையும் அந்த அரசாங்கமே செய்யலாம் அல்லவா? 1. மாநில பாடத்திட்டத்தை மாற்றுவது. இன்னும் தெளிவாகச் சொன்னால் நீங்கள் சொல்வது போல் தரமில்லாத இந்த பாடத்திட்டத்தை மத்தியக் கல்வித்தரத்துக்கு உயர்த்தலாமே? 2. நம்மைவிட கல்வியில் இன்னும் பின் தங்கியுள்ள மாநிலம் ஏராளம். அவற்றை சரி செய்யலாமே? 3. எல்லா மாநிலங்களில் முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் ஆட்சியில் இருக்கும் வட மாநிலங்களையாவது சரி செய்யலாம். 4. அதை எப்படி மத்திய அரசு செய்யலாம் என கேட்பின், உயர்படிப்பில் மட்டும் கைவைக்க உரிமையும் உணர்வும் பெற்றிருக்கிறதா மத்திய அரசு? 5. இந்தபாடத்திட்டத்தில் 'மனித உடல்கூறியலை' விட்டுவிட்டு படித்தாலே உயர் மதிப்பெண் எடுக்கமுடியும் என்கிறீர்களே, நீட் தேர்வுக்கும் நிச்சயம் நீங்

அக்கா மகள்!

அக்கா மகள்! பூவையிவள் பூப்படைந்தாள் இன்று! பூவே இவள் பூத்துவிட்டாள் இன்று!! மொட்டவிழ்ந்த சேதி ஒன்றை கொட்டடித்து சொல்லோம், வாரீர்!! உடல் மறைக்கும் பச்சை சேலை உடுத்திவிட அத்தைமாரே வருக! முற்றம் மறைக்கும் பச்சை ஓலை முடைந்துகட்ட மாமன்மாரே வருக!! சத்து சேர்க்கும் பச்சை முட்டை மிச்சமில்லாமல் குடிச்சிடனும்! மாமன்பேசும் குறும்புவார்த்தை அத்தைக்கு சொல்லாம வெச்சுகிடனும்!! இப்படி அப்படி அறிவுரை சொல்லி மனசுக்கும் வயசுக்கும் பலம்சேர்க்க மற்றோர் எல்லாம் வருக!! பார்வதி (கௌரி) மகளை பாடிட வருக! வள்ளிமணாளன்(முத்துக்குமார்) வாரிசுக்கு வாழ்த்துச் சொல்ல வருக! -அ.ச.கி.

நண்பர்கள் தினம்!

நண்பர்கள் தினம்! இன்று ஒருநாள் போதுமா? நீயும் நானும் சேர்ந்ததை சொல்ல இன்று ஒருநாள் போதுமா?! உலகை ஆளும் நட்பைச் சொல்ல இன்று ஒருநாள் போதுமா?! நட்பையும் நம்மையும் கொண்டாட இன்று ஒருநாள் போதுமா?! வாழும் வாழ்வை வரிந்துகட்ட இன்று ஒருநாள் போதுமா?! ஒரு ஆயுள்தான் போதுமா?! -அ.ச.கி.

விரல் வழி வழியும் கவிதைகள்!

விரல் வழி வழியும் கவிதைகள்! முன்பு கைகோர்த்த நொடிகள் எல்லாம் கண் முன்னே விரிகிறதே! இன்று உன்னை நினைக்கையில் உள்ளே நீர்கோர்த்து கொல்கிறதே! முன்பு காதலின் நீளத்தை எல்லாம் காத்திருப்பு அளந்திடுமே! இன்று காத்திருப்பின் இனிமையை சொல்ல காதலிடம் தெளிவில்லையே! முன்பு இரண்டே மணிநேரம் பேசி இரு ஆயுள் வாழ்ந்திருப்போம்! இன்று இருபது நொடிகூட போதும் இந்த உயிர் அர்த்தப்படும்! கண்ணை விட்டு நீரைப் போல் சதையை விட்டு ரத்தம் போல் உடலை விட்டு உயிரே போல் உறவை உதறி சென்றாயே! தேடித்தேடி உன்னையே தொலைந்து நானும் போகிறேன்! விட்டுசென்ற பெண்மையே கலைந்து நானும் சாகிறேன்!! மகிழ்வாய் ஒரு வாழ்க்கை செய்து ஒற்றை கோப்பையில் நீ தந்தாய்! பருகும்வரை பொறுமை இல்லையோ பறித்துக்கொண்டு ஏன் சென்றாய்?! பொதுவாய் சில நொடிகள் மனதிலே புதைந்திருக்கும்! புதைந்த அந்நொடிகள் மனதை அரித்திருக்கும்! விரல் வழி வழியும் கவிதைகள் எல்லாம் காகிதம்கூட அறிகிறது! விழி கொண்டு பார்த்தும் பெண்ணே என் வலி(ரி) உனக்கு புரியலையா?! காவி ஏற்க மனமில்லை - என் காதலை ஏற்றிடு! பாவி - தோற்க மனமில்லை சாதலை நோற்கிறேன்! -அ.ச.கி.

சிலிர்ப்பு!

சிலிர்ப்பு! இராட்டினச் சவாரி.. ரோசா செடியின் முதல் பூ.. அந்தப் பூவிதழில் பனித்துளி.. பனிநாளில் நெடும்பயணம்.. மழையோடு அடிக்கும் வெயில்.. எதிர்பாரா நாளில் விடுமுறை அறிவிக்கும் மழை.. மேகத்துக்கு நிழல் விழுமாறு பறக்கும் பறவை.. இரவின் கருப்பில் மதிற்பூனையின் கண்கள்!.. இன்னும் அழியா கள்ளிச்செடி கல்வெட்டுகள்.. விடியல் நேரத்தில் ஒற்றைக் குயில் சத்தம்.. கொன்றைமரம் உதிர்த்த மஞ்சள் மழை.. பச்சை போர்த்திய வயல்.. மருதாணி கைகள்.. முடிகோதும் விரல்கள்.. இப்படி என்னை சிலிர்ப்பூட்டும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று முதல் இணைகிறது- உன் மையிட்ட கண்கள்.. மையமான புன்னகை.. மயக்கும் சுருள்முடி.. கனவை நிறைக்கும் நீள் கழுத்து.. தூக்கம் மறக்கும் குளிர் பேச்சு.. கவி கொடுக்கும் உன் இதழ்.. களி கொடுக்கும் உன் குரல்.. சொர்க்கம் சொட்டும் சொப்பன நிமிடங்கள்.. உன் அருகாமையில் கிட்டும் உணர்ச்சியின் எல்லை.. நினைவு இழக்கும்படி அழுத்தப் பார்வை.. உயிர் தொலையும்படி ஒரு தீண்டல்.! -அ.ச.கி.

அனிதாக்களின் தேசம்!

அனிதாக்களின் தேசம்! குட்ட குட்ட குனிவது எங்கள் குணமென்று கொண்டீரோ?! திட்ட திட்ட தீர்வது எங்கள் இனமென்று கொண்டீரோ?! முட்ட முட்ட மூழ்குவது எங்கள் இயல்பென்று கொண்டீரோ?! வெட்ட வெட்ட சாவது எங்கள் இயல்பென்று கொண்டீரோ?! குட்ட குட்ட கூடுவோம்! திட்ட திட்ட திமிர்வோம்! முட்ட முட்ட முறைப்போம்! வெட்ட வெட்ட வளர்வோம்! நெஞ்சம் நிமிர்ந்து நின்றால் கொஞ்சம் திமிர்ந்து நின்றால் ஊர் தாளுமா?! பார் வாழுமா?! புனிதத்தின் பெயரைச் சொல்லி மனிதத்தை கொன்றொழித்தார்! ஒற்றைத்தேசம் என்றே சொல்லி வேற்றுமையை தூண்டிவிட்டார்! தரமென்று சொல்லிச் சொல்லி நீதியை தூக்கிலிட்டார்! அனிதாக்களின் தேசமிது எத்துணை பெருமையிது? இனியொரு முறை நிகழ்ந்திடவா பொறுப்போம்? நிகழும் சூழலை வேரோடு அறுப்போம்!! எங்கும் தமிழ் இனமுண்டு அதற்கு தனியே குணமுண்டு! அமிழ்தம் அவனது மொழிதான்! ஆனால் அன்பே வழியாய் கொள்ளாதே! அறத்தை வழியாய் கொள் தமிழா! - எதிரி சிரத்தை ஒழித்து கொல் தமிழா! அறச்சீற்றம் கொண்டு நில் தமிழா! யுகமாற்றம் வேண்டும் வெல் தமிழா! -அ.ச.கி கரு. பழனியப்பன் சொல்லியது போன்று 'ஒன்றாய் இரு

நான் அறிந்த பெரியார்!

நான் அறிந்த பெரியார்! என்னிடம் பல நண்பர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. நீ பெரியாரை தூக்கிப் பிடிப்பது ஏன், அவர் அப்படி என்ன செய்து விட்டார், கடவுள் மறுப்பால் விளைந்தது என்ன... இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்பது வாடிக்கை! அவர்களுக்கெல்லாம் அங்கங்கே நான் பதில் சொல்லியிருந்தாலும், ஒரு முழுமையான பதில், பெரியாரைப் பற்றிய முழுத்தரவை, தகவல் தொகுப்பை எங்கேயும் தர இயலவில்லை. நேரம் இல்லாதது, சிலருக்கு விளக்கம் கேட்க மனமில்லாமை என பல காரணங்கள் உண்டு! ஆகையால் இந்த பதிவில் என்னால் இயன்றதை, நான் அறிந்ததை பதிவிடுகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகமோ, கருத்து மாறுதலோ இருப்பின் கருத்திடவும். பெரியார் என்றாலே அவரை கேள்விப்பட்டோர், அரைகுறை ஞானம் கொண்டோர், முழுதாய் அறிந்தோர் என எல்லோருக்கும் முன்வந்து நிற்பது அவர்தம் 'கடவுள் மறுப்பு கொள்கை'. அதைத் தாண்டிய அவரின் செயல்பாடுகள், அவரைப் பற்றி முழுமையாய் அறியும் முயற்சி எடுத்தவர்கள் மட்டுமே அறிந்தவை. அவையாவன: -சாதிய ஏற்றத்தாழ்வை எதிர்த்தல் -பெண்ணுக்கு சம உரிமை -கடவுள், மத நம்பிக்கை என்ற பெயரில் நிகழ்ந்த மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது -சுயமரியாதைக் கொள்கை -

வணக்கம்!

வணக்கம்! ஆழ்மன நினைவுகளில் அந்தரங்கமாய் ஒளிந்திருப்பவர்களே! அரைகுறை பிரசவம் போல் அவசரகதியில் நட்பதிகாரம் எழுதியவர்களே! இங்குதான் என் நினைவெல்லாம் இதயம்தாண்டி வேறெங்கு - என்று இலக்கண நட்பு இயற்றியவர்களே! உணர்தலும் உணர்தல் நிமித்தமுமே உண்மை நட்பென்று உணர்த்திய சில உயிர்களே! வேறு பாதை ஏற்பதில்லை உணவு வேண்டி நோற்பதில்லை உறுதி உளம் கொண்டோரே! ஓரிரு நாள் நட்போடு ஓரம் ஒதுங்கி கொண்டவரே! நட்பில் துவங்கி காதலில் முடித்தவரே! காதலென்று துவங்கி நட்பை முறித்தவரே!! உயர்வுக்கென்று ஒரு சிலரும் ஊதியம் தருமென்று ஒரு சிலரும் உருப்படியாய் படித்த வெகுசிலரே!! உத்தமம் இதுதான் என்றும் ஊரார் சொன்னார் என்றும் உகந்தது இதுதான் என்றும் உற்றார் வைதார் என்றும் கட்ஆஃப் கிடைத்தது என்றும் கதைஎழுத தெரியும் என்றும் வேறுவழி இல்லை என்றும் வேறு சிலகாரணம் கொண்டும் பொறியியல் பட்டதாரி ஆனோரே! எப்படி சந்திப்பு நிகழ்ந்திருந்தாலும் என் சிந்திப்பில் நிற்கும் என்னருமை நட்புறவுகளே! இறுதிநாள் முடியும்போது இமைவிட்டு இறங்கிய ஈரத்துளிகளின் காரணகர்த்தாக்களே! என் நினைவுகளை தூசி தட்டியபோது உங்கள் நினைவு கிட்டியது! உங்கள் எலார்க்கும் வணக்கம்

நம்பிக்கை!

நம்பிக்கை! ஆற்றில் விழுந்தவனுக்கு நம்பிக் கை கொடு - எழுந்திடுவான்! 'நம்பிக்கை' கொடு - நீந்தப் பயில்வான்!! -அ.ச.கி.

அரசுப்பள்ளிகள்!

அரசுப்பள்ளிகள்! வாக்குச்சாவடிகளாய் மட்டுமே மாறிப்போன அரசுப்பள்ளிகள்! -அ.ச.கி.

கம்யூனிஸம்

கம்யூனிஸம் உனக்கு அது ஒட்டடை! இன்னொருவருக்கு அது வீடு! -அ.ச.கி.

வர்ணம்!

வர்ணம்! --------- மூ'வர்ணம்' என்றாலே இந்தியா நினைவு வரும்! ஒரு காலத்தில் இது நான்காக இருந்தது! -அ.ச.கி.

எதை எனக்கு அருள்வாய்?!

எதை எனக்கு அருள்வாய்?! பஞ்சணை தேவையில்லை - உன் நெஞ்சணைத்த போதினிலே! துஞ்சிட தோணவில்லை - நீ கொஞ்சி பேசயிலே!   காணும் திசை யாவிலும் கண்ணே உன்னால் நகர்கிறேன்! பாரின் மிசை சாவிலும் பெண்ணே உன்னை நுகர்கிறேன்!   காதலும் ஓர் நோய்தான் உருக்குதே உயிரையும்! சாதலும் ஓர் வரம்தான் சேர்க்குமே நம்மையும்!   நம்மிடையே காதலை அழைப்புகள் அளக்குமே! காதலின் கரைகளை கண்ணீர் வரையுமே!   காதலை பிரிந்தபின் உயிர் வாழ்வது எவ்விதம்?! தீயும் அணைந்தபின் வெப்பம் இருக்குமே அவ்விதம்!   உந்தன் விழி கண்மையே கலைந்து விடக்கூடாதே! என்னை ஈர்த்த பெண்மையே நீயும் அழுது விடாதே!   எதுகையும் மோனையும் எதுக்கடி உன்னிடம்?! என் கவிதைத் தமிழுமே பிறந்ததே உன்னிடம்!   தாண்டி செல்ல மனமில்லை - உன் தூண்டில் விழி வீழ்ந்தபின்! மண்டி யிட்டு கேட்கிறேன் ஏன்டி எதை எனக்கருள்வாய்?!   காவி ஏற்க (எனக்கு) மனமில்லை - என் காதலை ஏற்றிடு! பாவி - தோற்க மனமில்லை சாதலை நோற்கிறேன்! -அ.ச.கி.

தனிமைத் துணை!

தனிமைத் துணை! ---------------- இருட்டை விலக்கி வைத்த ஓர் அறை! கற்றை காகிதம் கட்டுக்களாய் புத்தகம் மையிட்ட பேனா! இதைச் சுற்றி என் மனம்! ஒரு ஓரமாய் என் உடல்! இவைதவிர அறையில் மிஞ்சும் இடமெல்லாம் தனிமையே ததும்புகிறது! -அ.ச.கி.

உருவுகண்டுஎள்ளாமை!

உருவுகண்டு எள்ளாமை! எந்த ஒரு மழைத்துளிக்கும்‬ ‪முத்தாகும் சத்துண்டு!‬ ‪எந்த சிறு தீப்பொறிக்கும்‬ ‪காட்டை எரிக்கும் சக்தியுண்டு!‬ ‪ -அ.ச.கி.

மழை!

மழை!   தேர்தல் வாக்குறுதிக்கும் - பின்வரும் அரசின் திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒத்திருந்தது நேற்றைய மழை! -அ.ச.கி.

சா'தீ'!

சா'தீ'! சாதிக்கும் வலு இல்லாதவன் தான் சாதிக்கு வலு சேர்ப்பான்! -அ.ச.கி.

வேலுப்பிள்ளை பிரபாகரன்!

அருமை தலைவா! அருந்தமிழ் புதல்வா!! வேலுப்பிள்ளை பிரபாகரன்! (26/11/1954 - 18/05/2009) மஞ்சள் பூசிய தீக்கொழுந்து ஒன்றின் தீவிரம் காட்டியவன்! தாயின் கருவறை இருட்டிலேயே - புரட்சி திட்டம் தீட்டியவன்! மண்ணின் மகுடம் மலைகளைப் போன்றே மன உறுதி கொண்டவன்! உற்ற உறவுகள் இன்புற்றிருக்கவே உள உறுதி பூண்டவன்! மகரந்தம் கூடி வளர்த்த செடிபோல் தேனொழுகும் பேச்சுடையான்! வேண்டியதெல்லாம் விடுதலை என்றே ஒற்றை மூச்சுடையான்! முப்படை கொண்டே தனி ராஜ்ஜியம் செய்த ராஜ ராஜனவன்! 'கரிகாலன்' என்றோர் பெயரும் கொண்டு நடமாடிய காலனவன்! தாய்த்திருநாட்டின் சொந்தத்தை எல்லாம் அடைகாத்த அண்ணலவன்! 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' காத்த விதத்தில் அண்ணாவுக்கும் அண்ணனவன்! ஆழிப் பேரலையும் ஊழிப் பெருங்காற்றும் கலவு கொள்ள பிறந்த மகன்! சூழ்ந்த நீள்வானமும் வாழ்ந்த யாழ்ப்பாணமும் இழவு கொள்ள இறந்த மகன்! 'மயிர் போல் அன்றோ உயிரும்? என்றோ ஒருநாள் உதிர்ந்தே போகும்!' என்றே வாழ்ந்தவனை வென்றே வீழ்ந்தது மண்ணும்! 'புலி' பசித்தாலும் புல் மேய்வதில்லை! உயிர் நசித்தாலும் கால் ஓய்வதில்லை!! தன்னுயிர் மதியாதவர்களை உலகம் மதிக்கும்

தாஜ்மஹால்!

தாஜ்மஹால்! கண்ணீரில் எழும் கவிதைகளே ஆகச் சிறந்தவை என்பதற்கு அடையாளமாய் நிற்கிறது 'தாஜ்மஹால்'! - அ.ச.கி.

தீ!

தீ! எந்தப் பக்கம் ஊதினால் பற்றும் எந்தப் பக்கம் ஊதினால் அணையும் என்று அறிந்தவன் இன்றைய பத்திரிக்கையாளன்! -அ.ச.கி.

முட்டாள் தினம்!

முட்டாள் தினம்! ----------------- ஏமாற்றப்படும் சில தருணங்கள்! விட்டு விடுதலையாகிறோம் கருவறை எனும் சிறு அறையை விட்டு - என்றெண்ணி சிரிக்கும் குழந்தை சிறைபட்டது பரந்த உலகில்! தெரிந்த கேள்விகளை தேர்வு வினாத்தாளில் தேடும் மாணவன்! இன்றாவது என்னை கவனிப்பாளா என்னவள் என்ற நினைப்பில் என் கல்லூரித் தோழன்! கனவில் வடித்த சிலை உயிர் பெற்றார் போல் ஓர் மனைவி - என வேண்டும் வாலிபன்! இறுக்க மூடியிருக்கும் பிறந்த குழந்தையின் பிஞ்சுக் கையை பிரித்து பார்க்கும் தகப்பன்! தன் துயரம் தனயன் அறியக்கூடாது என தவிக்கும் தந்தை! இப்படி பல தருணங்களில் ஏமாறத்தான் போகிறோம் என்று தெரிந்தே ஏமாறுகிறோம்! இவையெல்லாம் நமக்கு சுகம்தரும் ஏமாற்றங்கள்! இவைதவிர இன்னும் சில... 'நாளை வீட்டுக்கே வரும் உன் உதவித்தொகை' என உரைக்கும் உயரதிகாரி சொல்கேட்டு திரும்பும் ஊன்றுகோல் கிழவன்! 'மூன்றே மாதத்தில் மும்மடங்கு பணம்' எனக் கேட்டு மும்மரமாய் முதலீடு செய்யும் முட்டாள் சாமான்யன்! 'வளமான இந்தியாவை உருவாக்குவோம்' என வரலாற்று காலம் தொட்டு வஞ்சகம் இல்லாமல் பொய்யுரைக்கும் அரசியல் ஆன்றோனின் பேச்சை அகலவாய் பிளந்து கேட்கும்

பெண் எனும் சக உயிர்!

பெண் எனும் சக உயிர்! ----------------------- மூடரே! முழங்குவதேன்?! சிந்திக்கத்தானே மூளை! நிந்தித்தே நித்தம் அலைவதேன்?! உன்னுள்ளே சரிபாதி அண்டம்தான் 'அவள்'! உறைப்பது எப்போது?! பெண்ணுள்ளே கிடந்த பிண்டம்தான் 'நீ'! உறைப்பது எப்போது?! மண்ணுள்ளே மக்கும் பண்டம்தான் 'நாம்'! உறைப்பது எப்போது?! மனிதம் கொண்டவன்தான் மனிதன்! அந்தச் சொல்லின் புனிதம் விண்டவனை என்ன சொல்லி அழைக்க?! ஓ! பெண்ணே! மறுசனனம் ஒன்றெடுத்து - ஆண் மகவு உருவெடுத்து - இம் மண்ணில் பாதம் பதி! அன்று உனக்கு இவ்வுலகில் இடம் இருக்கும்! இல்லையேல்- உன் அன்னையின் மார்பு காம்பை நீ கவ்வும்முன் இம்மண் உன்னைக் கவ்வும்! பால்மணம்- உன் நாசியை நிறைக்கும்முன் பாழும் உலகம் உன் நாடியை நெரிக்கும்!! -அ.ச.கி. https://m.youtube.com/watch?v=6OcPS5ouM0M

கண்ணீர்!

கண்ணீர்! ஏழைத் தாயின் சமையலில் என்றும் உப்பு அதிகமாகவே இருக்கிறது! -அ.ச.கி.

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் ! நித்திரை கலைத்தெழு தமிழா ! சுற்றியுள்ள ஊர் எங்கும் - உம்மை சுற்றிசுற்றி அடிக்கின்றனர் ! தண்ணீர் தர மறுக்கிறான் ஒருபுறம் ! தண்ணீர் சமாதிகள் மறுபுறம் ! செம்மரம் ஒன்றே காரணம் என்று செங்குருதி குடிக்கிறான் இன்னொருவன் ! பிரதிநாள் ஒவ்வொன்றும் - புதுப்புது பிரச்சனைகளை தேடித்தேடி பிரயத்தனப்படுகிறான் பிறிதொருவன் !! இனிச்சொல்லுங்கள் தேவைதானா இன்றைய உற்சாகம் ?! என்று வாழ்த்துக்களாக மட்டுமே வருடப்பிறப்பு இல்லாமல் வாழ்த்தும் வண்ணம் வாழ்க்கை அமையுமோ அன்று கொண்டாடுவோம் வெற்றிக் குலவையிடுவோம் தமிழனாய் தலைநிமிர்வோம் தமிழர் திருநாள் கொண்டாடுவோம் ! - அ . ச . கி .

நான் உணர்ந்தவை, உண்மை என்று நம்புபவை! [10] (சிறு சொல்லாய்வு!)

சிறு சொல்லாய்வு !      பின்வரும் சொற்களின் வேர்ச்சொல்லான வினைச்சொல் '- ற்று ' என்றே முடிகிறது . அதாவது ஆற்று , தேற்று , ஏற்று , மாற்று என்பன வேர்ச் சொற்கள் . அதன்மூலம் எழும் சொற்கள் :- ஆறுதல் - ஆற்றுதல் தேறுதல் - தேற்றுதல் ஏறுதல் - ஏற்றுதல் மாறுதல் - மாற்றுதல்      இச்சொற்களில் முதலில் வருவன , அதாவது , ஆறுதல் , தேறுதல் , ஏறுதல் , மாறுதல் என்பன ' தன்னிலை ' (First person) தன்மீதே ஆற்றும் தொழிலை குறிக்கும் சொற்கள் . அதைத்தொடர்ந்து வருவன ' தன்னிலை ' பிறர் மீது ஆற்றும் தொழிலை குறிப்பது . பின்வரும் தொடர்களை காண்க :- நான் மரம் ' ஏறுகிறேன் ' அதை மேலே ' ஏற்றுகிறேன் '      மேற்சொன்ன சொற்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமையை கவனியுங்கள் . அனைத்து சொற்களின் முதலெழுத்து நெடிலாகவே அமைந்து இருக்கிறது . முதலெழுத்து குறிலாக அமையும் வார்த்தைகள் இந்த இரட்டை முறையில் வருவது இல்லை . எ . கா :- சுற்றுதல் , கற்றல் , விற்றல்      ஆக , முதலெழுத்து நெடிலாக அமையும் சொற்களே இத்தகைய இரட்டை

அம்மாவுக்கு ஞாபக மறதி அதிகம்!

Image
அம்மாவுக்கு ஞாபக மறதி அதிகம்! தன் பசி மறப்பாள் தூக்கம் மறப்பாள் துயரை மறப்பாள் நோய் நொடி மறப்பாள் - தன்னை நேசிக்க மறப்பாள் சுவாசிக்க மறப்பாள் சுற்றம் மறப்பாள் சுகம் எல்லாம் தொலைப்பாள் உலகை மறப்பாள் உடலையும் மறப்பாள் - தானும் ஓர் உயிரென்பதையே மறப்பாள்! தான் ஈன்ற உயிர் தன் அருகிலோ தள்ளி தொலைவிலோ இருக்கும்போது!                  -அ.ச.கி.

என்று விடியும்?!

என்று விடியும்?! என்று விடியும் என்று கேட்கிறார்கள்- வறுமையை வரம் வாங்கியவர்கள்! கொடுமையில் உழன்றவர்கள்! பசி அரக்கனுக்கு இரையானவர்கள்! குண்டு சிதறலிலும் குழந்தைக் கதறலிலுமே இசை கற்று வளர்ந்தவர்கள்! சிரிப்பென்ற வார்த்தையை சிந்தித்தே அறியாதவர்கள்! அழுகை தவிர வேறேதுவும் அனுபவித்து அறியாதவர்கள்! அன்னை பூமியிலேயே அகதிப் பட்டம் வாங்கியவர்கள்!!     - அ.ச.கி.

நீல நிறப்புடவை!

நீல நிறப்புடவை! பார்வை பட்டதுமே பரிதவிக்க விட்டுடுமே! அதுபோல் இல்லை! காதுமடல் கண்டதுமே காதல் கிசுகிசுக்குமே! அதுபோல் இல்லை! வசதியாய் நேரம்கிடைத்தாலும் வார்த்தைகள் தடுமாறுமே! அதுபோல் இல்லை! விரல்நுனி பட்டாலும் விசுக்கென்று விலகிடுமே! அதுபோல் இல்லை! கன்னக்குழி அழகென்று கவிதை எழுதிடுமே! அதுபோல் இல்லை! கண்டதுமே காதல் கண்ணுக்குள் கலங்கடிக்குமே! அதுபோல் இல்லை! கண்ணே! கலைமானே! காவியமொழி கேட்டிடுமே! அதுபோல் இல்லை! இமைகள் கொண்டே இதழ்கள் வருடப்படுமே! அதுபோல் இல்லை! இரவின் நீள அகலங்களை அலைபேசி அழைப்புகள் அளந்திடுமே! அதுபோல் இல்லை! இங்கும் அங்குமாய் சில உரசல்களில் உயிர் துளிர்த்திடுமே! அதுபோல் இல்லை! காதல் மனங்களில் கலர் கனவுகள் வியாபித்திருக்குமே! அதுபோல் இல்லை! விரல் இடுக்குகளில்- ஆண் பெண் விரதங்கள் நசுக்கப்படுமே! அதுபோல் இல்லை! இப்படி எதுபோலும் துவங்கவில்லை நம் காதல் நொடிகள்! பேசியே பழகினோம்! பழகுதல் வேண்டியே பேசினோம்!! அவை எல்லாம் - என் உயிர் உணர்ந்த நொடிகள்! உணர்வு இழந்த நொடிகள