Posts

Showing posts from September, 2016

எழுந்திடமாட்டாயோ?!!

எழுந்திடமாட்டாயோ?!! கண்டோர் எல்லாம் கைகூப்பிய முகம் ஒண்ணு! குரலே ஒசத்தாத குழந்தை முகம் ஒண்ணு! வழிந்தோடும் அன்புகொண்ட வாஞ்சை முகம் ஒண்ணு! வெளியுலகம் காணாம வாழ்ந்த முகம் ஒண்ணு! வெள்ளந்தியாய் வாழ்ந்த வெள்ளை முகம் ஒண்ணு!! ஐவ்வகை முகமும் இன்று ஐஸ்பெட்டியில் வச்சு - இன்னும் வெளுக்குதம்மா!!! கலையாத தலமுடிய கணம் ஒரு தடவ சீவி! நிதம் ஒரு தடவ நீவி! நின் முடி தன் நிறம் இழந்ததம்மா!! காப்பித் தண்ணியக்கூட ஆத்திக்குடிச்சிடுவ!! காலம் ஆத்தாத மனக்குறைய ஆத்தா - நீ சுமந்த!!! சுமையும் தாங்காமதான் சுகம் தொலைச்சயம்மா!! காய்ச்சல் வந்தாக்கூட கவனம் நிறைச்சுடுவ! சுகவீனம் சிறிதானாலும் - உன்னயே சுருக்கித்தான் சரி செஞ்சிடுவ!! உன் உடல் ஏற்கும் பதம் அறிஞ்சு பதனமா எட்டு வெப்ப! எட்டு திசை சுத்தி பாக்கவா எட்டாத இந்த முடிவு எடுத்த!!! உன் வழி நடந்தே வாழ்க்கை நடத்திய கூட்டம் வந்திருக்கு! எழுந்திடமாட்டயோ?!! பொங்குபாளையத்துல பொங்கு பொசுக்குனு போயிட்ட! - உன்னால பொறப்பு எடுத்து - நீ பொத்தி வளர்த்த பேரன் வந்திருக்கேன்! எழு

செவ்வாய்!!

செவ்வா ய்!! எனக்கும் செவ்வாயில் குடிபுக ஆசை!! உன் உதட்டைப் பார்த்ததில் இருந்து!!      - அ.ச.கி.

வெட்கம்!!!

வெட்கம்!!! உன்னை நினைத்தால்- வெட்கப்பட்டு வார்த்தைகள் கூட வெளிவர மறுக்கின்றன!!       - அ.ச.கி.

காதல் தீ!!

காதல் தீ !! நீ உன் அன்பால் அனைவரையும் "அணைக்க"த்தானே செய்தாய்?! எனக்குள் மட்டும் ஏன் பற்ற வைத்தாய்?! காதல் தீயை!!          - அ.ச.கி.

காப்பிரைட்!!

காப்பிரைட் !! நான் தவம் கிடக்கிறேன்! என் காதலுக்கு உன்னிடம் "காப்பிரைட்" வரம் வாங்க!!                  -அ . ச . கி .

ஆக்சிஜன்!!

ஆக்சிஜன்!!!   நீ இறந்தவுடன் நானும் இறந்துவிடுவேன்!! ஆக்சிஜன் இல்லா இடத்தில் ஆறடி உடம்பு இருந்து என்னபயன்?!                  -அ . ச . கி .  

எதிர்பாரா நேரத்தில்!!

எதிர்பாரா நேரத்தில்!! எதிர்பாரா நேரத்தில் சட்டென தந்துவிடுகிறாய்! சேர்த்து வைக்க இடமில்லாமல் தவிக்கிறேன் நான்!! உன் முத்தத்தையும்! என் வெட்கத்தையும்!!                       -அ . ச . கி .

என்ன செய்வாய் நீ?!!

என்ன செய்வாய் நீ?!! எதிரில் நீ அமர்ந்திருக்கிறாய்! எட்டிவிடும் தூரம்! கைகள் கட்டிவிடும் தூரம்!! கண்கள் தேடுகின்றன! விரல்கள் நீள்கின்றன!! என் உடலால் உன் உடல் பூசுகிறேன்!! சுடும் மூச்சுக்காற்று சுகமாய் தீண்ட! உரசிடும் தூரத்தில் உதடுகள்!! முட்டி விடு! முத்தம் பதி! - உதட்டு யுத்தம் செய்!! என்று உன் உதடு துடிக்கின்றது!! சட்டென்று தீண்டாமல் நகர்ந்தால் என்ன செய்வாய் நீ?!!           -அ . ச . கி .  

கண்ணோடு கண்ணினை!

கண்ணோடு கண்ணினை! உன் கண்ணில் என் கண்ணை உற்றுப்பார்த்த வேளை... வள்ளுவன் குறளுக்கு தெளிவுரை கிடைத்தது!!              - அ . ச . கி .