ஆலமரத்து வீடு!!
ஆலமரத்து
வீடு!!
ஆலமரத்து
வீடு
ஆயிரம்
பாடம்
சொல்லும்!!
ஆலங்குயில்
பாடம்
சொல்லுமா?!
- என்று
ஆச்சரியமா
மனிதா?!
ஆம்!
அது
பாடம்
சொல்வது
ஆறறிவு
கொண்ட
உமக்குத்தான்!!!
ஆறாம்
பாடமாய்
மட்டுமே
தமிழைப்
பயின்ற
மனிதா!!
மருதநில
வழக்கமே
மாந்தர்
அதிகாலை
எழுவதுதான்!
மறந்தாயா?!
பகுத்துண்ணும்
பழக்கத்தை
பறவையினம்
பார்த்தாவது
பழகுவாயா?!
உழைத்து
உண்டால்தான்-
அவைக்கு
உறக்கமே
வரும்!
உண்மை
அறிவாயா?!
தம்
தகுதிதாண்டி
உயரும்
ஆசைகொள்ள
அவை
அனுமதிப்பது
இல்லை!!
எல்லாவற்றிற்கும்
மேல்-அவை
மறந்தும்கூட-
தன்
தாய்மொழியை
மறக்க
நினைப்பதில்லை!!
அறிவாயா
நீ?!
அப்படிப்பட்ட
வீடுகள்
எல்லாம்-இன்று
நீ
வளர்க்கும்
நீண்ட
இரும்பு
மரங்களால்
நிர்கதியாய்
நிற்கின்றன!!!
கொஞ்சம்
மனிதனாய்
மாறு
மனிதா!!!
-அ.ச.கி
Comments
Post a Comment