ஓ! இளைய பாரதமே எழுக!!

ஓ! இளைய பாரதமே எழுக!!
(சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்)

(12/01/1863 - 04/07/1902)
பழம்பெரும் பாரதத்தாயின்
மடியில் மலர்ந்த
மண்ணின் மைந்தனே!
எழுந்திடு! விழித்திடு!!

மது சுவாசத்திலும்
மாது நாசத்திலும்
மாட்டித் தவிக்கிறார்கள்
உன் உடன்பிறந்தோர்!

ஊழல் அலையிலும்
ஊடுருவல் தொல்லையிலும்
உருகுலைகிறார்கள்
உன் குலத்தோர்!

நாக விடம் கொண்ட
நாகரிக நாட்டத்தால்
நட்டப்படுகிறார்கள்
நம்மவர்கள்!

இழந்த பாரதப் பெருமையை ஈட்ட
புல்லாரை புறந்தள்ள
புயலேறு போல் புறப்படு!
புதுரத்தம் பாய்ச்ச
உத்வேக உருவெடு!!

இளைஞ இந்தியாவே!
காவித் துறவி
காவியத் துறவி
மேதினியெங்கும்
மேவியத் துறவி
வழிதனில்
விழிதனை வைத்து
விழிப்பை விதைத்திடு!
எழுச்சியை எழுப்பிடு!!

-அ.ச.கி. 

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

தொன்மதுரை!