வல்லினம்!!

வல்லினம்!!

திசையறியாது
திகைத்து - துக்கத்தில்
திளைத்து - ஏக்கம்
திரண்டு - நம்மை
தினந்தினம் வாட்டுகிறது!!

இதனூடே -
பகிரமுடியா பல வலிகளும்!
பச்சைக்குணம் கொண்ட - பல
இச்சை நரிகளும்!
பச்சாதாபம் உண்டாக்கும்
துரத்தமுடியா எலிகளும்!!
பச்சோந்தி குணம் கொண்ட
புல்லர்களும்!!

வீழ்த்தக் காத்திருக்கும்
விடம் நிறைந்த சர்ப்பங்களும்!!
விழும்வரை காத்திருக்கும்
ஈன கழுகுகளும்!!


கிளறிவிடும் கோபம் -
கிழித்து காற்றில் எறியப்பட்ட
காகிதம் போல்..
கீழே மேலே ஏறி இறங்கி
படப்படக்கிறது!!

இதை அடக்கமுயலும் நான் -
இரப்பதெல்லாம் ஒன்றே!
வல்லினம் போல்
வேண்டும் இடத்து மிகும்
கோபம் வேண்டும்!!!
            
         -..கி.

Comments

Post a Comment

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!