மனிதர் அல்லாதோர் சிலர்!!!

மனிதர் அல்லாதோர் சிலர்!!!


ஆஹா!
கொஞ்ச கொஞ்சமாய் புரிகிறது!!


வஞ்சித்து வாழும் வாழ்க்கைக்குள்
தஞ்சம் புகுந்தோர்!!


வெள்ளைக்காக்கா பறக்குது எனக்கூறி
வெள்ளந்திகளை ஏமாற்றும் -
வெள்ளைச் சட்டைக்காரர்கள்!!


அமிலம் வீசி
அழகு முகம்
அழித்திடும் - அற்பர்கள்!!


தன்
சுயநலத்திற்காக சூன்யம் செய்து -
சுகம் அனுபவிப்பவர்!!


இன்னும்
மலரா மொட்டுக்கள்
சின்ன சிட்டுகளை கூட
சீரழிக்கும் -
சின்ன புத்திகாரர்கள்!!!


மேட்டுப்பகுதியை
இன்னும் மேடாக்க,
பள்ளத்தை சுரண்டும் -
(பண)பற்றுடையவர்கள்!!


சவத்திலும்
சர்வத்திலும்
சம்பாதிக்க ஆசைப்படும் -
அரசியல் ஆன்றோர்கள்!!


ஆஹா!
கொஞ்ச கொஞ்சமாய் புரிகிறது!!


கயமையும்
பொய்மையும்
பொல்லாங்குமே
மனிதகுணம் என்றானுதுவோ?!!


எனினும்,
மேற்சொன்ன மனிதகுணத்தினின்று
பிறழ்ந்து பிறந்த
மனிதர் அல்லாதோர் சிலர்
இம்மண்ணில் உளர்!!


     -..கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!