முட்டாள் தினம்!!!

முட்டாள் தினம்!!!

ஏமாற்றப்படும் சில தருணங்கள்!!!

விட்டு விடுதலையாகிறோம்
கருவறை என்னும்
சிறு அறையை விட்டு - என்றெண்ணி
சிரிக்கும் குழந்தை
சிறைபட்டது பரந்த உலகில்!!

தெரிந்த கேள்விகளை
தேர்வு வினாத்தாளில் தேடும்
மாணவன்!!

இன்றாவது,
என்னை கவனிப்பாளா?! -
என்ற நினைப்பில்
என் கல்லூரித் தோழன்!!

கனவில் வடித்த சிலை
உயிர்பெற்றார் போல் - ஓர் மனைவி!!
என்றெண்ணும் வாலிபன்!!

இறுக்க மூடியிருக்கும்
பிறந்த குழந்தையின்
பிஞ்சுக் கையை
பிரித்துப்பார்க்கும் தகப்பன்!!

தன் துயரம்
தனயன் அறியக்கூடாது - என்று
தவிக்கும் தந்தை!!!

இப்படி பல தருணங்களில்
ஏமாறப் போகிறோம்
எனத்தெரிந்தே ஏமாறுகிறோம்!!
இவை எல்லாம்
நமக்கு சுகம்தரும் ஏமாற்றங்கள்!!

இதைத் தவிர
இன்னும் சில!!

நாளை வீட்டுக்கே வரும்
உதவித்தொகை - என
உரைக்கும்
உயரதிகாரியின் பேச்சைகேட்டுத் திரும்பும்
ஊன்றுகோல் கிழவன்!!

மூன்றே மாதத்தில்
மும்மடங்கு பணம் - எனக்கேட்டு
மும்மரமாய்
முதலீடு செய்யும்
முட்டாள் சாமானியன்!!!

"வளமான இந்தியாவை உண்டாகுவோம்" - என
வரலாற்று காலம் தொட்டு
வஞ்சகம் இல்லாமல் பெய்யுரைக்கும்
அரசியல் ஆன்றோரின் பேச்சை
அகலவாய் பிளந்து கேட்கும்
அடிமட்டத் தொண்டன்!!

இன்னும் ஒருமுறை
இவருக்கே வாய்ப்பளிப்போம் - என மீண்டு(ம்)
தவறுக்கே ஓட்டளிக்கும்
கடமை தவறாத குடிமகன்!!

தெரியாமல்தான் கேட்கிறேன் -
இப்படி ஏமாறுவதில்
அப்படி என்ன சுகம் கண்டீர்?!!

ஆனால் - ஒன்று உறுதி!
நீவிர் தான்
முட்டாள்தினம் கொண்டாட
முழுத்தகுதி படைத்தவர்!!!
                    
                -..கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!